மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (23:45 IST)
மத்திய அரசின் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,  மருத்துவப் படிப்புக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவு தவறானது. இந்த செயல் மாணவர்களிடையே பீதியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு நிலுவையில் உள்ள நிலையில், இந்த செயல் மாநில உரிமைகளை பறிக்கும் செயல். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்