மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலமான அஜய் பவனுக்குச் சென்று, அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் செயலாளர் ஏ.பி.பரதன், தேசியச் செயலாளர் டி. இராஜா ஆகியோரை சந்தித்து பேசினார்.
மேலும், நவம்பர் 25 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ல மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு வைகோ அழைப்பு விடுத்தார். பின்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்தார்.