வங்கிகள் சூறையாடல்: பரபரப்பு வீடியோ!

செவ்வாய், 29 நவம்பர் 2016 (13:36 IST)
பழைய 500, 1000 நோட்டுகள் செல்லாத என்ற மத்திய அரசின் அறிவிப்பில் இருந்து அதனை வங்கிகளில் மாற்ற மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பல சிரமங்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர்.


 
 
பல இடங்களில் பணம் எடுக்க முடியாத பொதுமக்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் எஸ்பிஐ வங்கியின் கிளையில் பணம் எடுக்க முடியாத பொதுமக்கள் அந்த வங்கியை சூறையாடி உள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நன்றி: நக்கீரன்
 
நேற்று காலை முதலே இந்த வங்கியில் ஏராளமான மக்கள் பணம் எடுப்பதற்காக நீண்டவரிசையில் காத்திருந்தனர். அப்போது வங்கி ஊழியர்கள் அவர்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் இதனால் ஆத்திரமடைந்து வங்கியை அடித்து நொறுக்கினர்.
 
மேலும் லெய்மாகாங் என்ற இடத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் பணம் கிடைக்காததால் ஆவேசமடைந்து வங்கியின் ஜன்னல், கண்ணாடிகள், பெயர் பலகைகள் ஆகியவற்றை அடித்து உடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்