வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 80% பயணத்தை அந்த விண்கலம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இத்தகவலை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மங்கள்யான் விண்கலம் நல்ல நிலையில் இயங்கி வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.