மேடையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், மற்றொரு பக்கத்தில் பார்வையாளர்களும் அமர்ந்திருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்த துர்கேஷ் குமார் சிங் என்னும் வாலிபர் மேடையின் மீது ஏறி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு மேடையில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரான காமருஸம்மா பௌஜியை கட்டிப்பிடித்தக் கொண்டார்.
இச்சம்பவத்தால் இருவருக்கும் பலத்த தீ காயம் ஏற்பட்டது. தீக்குளித்த அந்த வாலிபருக்கு 95 சதவீத தீக்காயங்களும், பௌஜிக்கு 75 சதவீத தீக்காயங்களும் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.