நாங்கள் நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம். நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவாக தெரிவித்துவிட்டோம். வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நான் 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவள் என்றார். மேலும் கூறுகையில், வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான எங்களுடைய நடவடிக்கை, கொடூரமான 1894 ஆம் ஆண்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஒழிக்கவேண்டிய தேவையை தூண்டியது என்றும் குறிப்பிட்டார்.