இதற்கிடையில் இந்திய விமானநிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை என அமெரிக்க விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டு துறை அண்மையில் குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் இந்திய விமான போக்குவரத்து துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி ராஜு நேற்று ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் எனவும் விமானநிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல், விமானநிலையங்களை சுத்தமாக வைத்திருக்கவும், கஸ்டம்ஸ் மற்றும் குடியேற்ற துறை சேவைகளை கண்காணிக்கவும் பயன்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். ஏர் இந்தியாவை நஷ்டத்தில் இருந்து மீட்க வரிச்சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் கஜபதி, மோடியிடம் கோரிக்கை வைத்தார்.