பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது மகாராஷ்டிரா மாநில அரசு: பொதுமக்கள் மகிழ்ச்சி

திங்கள், 23 மே 2022 (07:00 IST)
பெட்ரோல் டீசலுக்கான வரிகளை ஏற்கனவே மூன்று மாநிலங்கள் குறைத்துள்ள நிலையில் தற்போது நான்காவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலமும் வரியை குறைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
மத்திய அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலை 8 ரூபாயும் டீசல் விலை 6 ரூபாயும் குறைந்தது
 
மத்திய அரசை அடுத்து ராஜஸ்தான், கேரளா மற்றும் ஒரிசா ஆகிய மூன்று மாநிலங்களும் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது என்பதும் இந்த மூன்று மாநிலங்களும் பாஜக இல்லாத கட்சிதான் ஆட்சி அமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நான்காவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது. இந்த மாநிலத்திலும் பாஜக அல்லாத கட்சி தன் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து தமிழகமும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்