வரும் பருவ காலத்தில் விதைப்பு உட்பட இனி எந்த விவாசாய வேலையும் செய்ய போவதில்லை என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல டன் பாலை கீழே கொட்டியும்; காய்கறிகளை சாலையில் வீசியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய கடன்களை முழுமையான ரத்து செய்ய வேண்டும். இலவச மின்சாரம் வழங்க வேண்டும். உற்பத்திக்கு ஏற்ற தகுந்த விலை நிர்ணயிக்க வேண்டும். நீர்ப்பாசனம் மற்றும் பாலுக்கான அதிக விலையை வழங்குதல் போன்ற கோரிக்கைகளுடன் போராடி வருகின்றனர்.