ஒரே நாளில் 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: மகாராஷ்டிராவில் பரபரப்பு!

ஞாயிறு, 7 மார்ச் 2021 (21:36 IST)
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதாகவும் இந்த ஐந்து மாநிலங்களில் இருந்துதான் 82 சதவீத கொரோனா நோயாளிகள் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தது 
 
இந்த ஐந்து மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் 38 பேர் பலியாகியுள்ளதாகவும் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்