அதிகபட்சமாக நான்டெட் தெற்கு தொகுதியில் 91 பேரும், குறைந்த பட்சமாக குகாகர், மாஹிம் மற்றும் குடல் தொகுதிகளில் தலா 9 பேரும் மனு தாக்கல் செய்ததாக தெரியவந்துள்ளது.
சவான், கராட் தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜ் தாக்கரே இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார். காங்கிரஸ் கட்சி 288 தொகுதிகளுக்கும், தேசியவாத காங்கிரஸ் 286 தொகுதிகளுக்கும், பாஜக சார்பில் 257 தொகுதிகளுக்கும், சிவசேனா 286 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
பாஜக வேட்பாளராக பார்லே தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜாவிற்கு ஆதரவாகவும், பைகுல்லா தொகுதியில் போட்டியிடும் மும்பை தாதா அருண் காவ்லியின் மகள் கீதாவிற்கு ஆதரவாகவும் தாங்கள் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என சிவசேனா கூறியது குறிப்பிடத்தக்கது.