ஆந்திர மாநிலம், குண்டூர் நகரத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். அவரது மகள் பிரதியுஷா. இவர் சென்னை ஐ.ஐ.டி விடுதியில் தங்கி எம்.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் போரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, அவரது அறைக்குள் போலீசார் சோதனை செய்த போது, ஒரு கடிதம் இருந்தது. அதில், ஆன்மிக சேவைக்காக இமயமலை செல்கிறேன். எனவே, என்னை யாரும் தேட வேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.