இந்நிலையில், சென்னை அணியின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்பிரமணியன் சாமியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்தனர்.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டர் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, சென்னை அணிக்கு தற்போது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். லோதா குழு விதித்த தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் தயக்கம் காட்டி வருகிறது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்