காதலனைக் கட்டிப் போட்டு இளம் பெண்ணைக் கற்பழித்த 9 பேர் கொண்ட கும்பல்

சனி, 23 ஆகஸ்ட் 2014 (15:15 IST)
காதலனைக் கட்டிப் போட்டு அவரது கண் முன்பே இளம் பெண்ணை 9 பேர் கொண்ட கும்பல் கற்பழித்து அதை செல்போனில் படம் பிடித்தக் கொடூர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

திருமணம் செய்ய இருக்கும் வாலிபருடன் ஐதராபாத் காசிம் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த அந்த பகுதி தாதா இளைஞர் முகமது, சையத் அன்வர், அலி ஆகியோர் சுவர் ஏறி குதித்து அந்தப் பண்ணை வீட்டுக்குள் புகுந்தனர்.

அவர்களை தடுத்த காவலாளியை தாக்கி மயக்கம் அடையச் செய்தனர். பின்னர் அவர்கள் தன் நண்பர்களை செல்போனில் அழைத்தனர். இதைத் தொடர்ந்து 9 பேர் அங்கு திரண்டனர்.

அவர்கள் இளம் பெண்ணின் வருங்கால கணவரைத் தாக்கி கட்டிப்போட்டு முழங்காலிடச் செய்தனர். பின்னர் அவரது கண் முன்பே அவர்கள் அந்தப் பெண்னை மானபங்கபடுத்தினர்.

அதற்கு இனங்க மறுத்த கீதாவை விஷ பாம்பு காட்டி மிரட்டினர். பாம்பை அவரது உடலில் ஊர்ந்து செல்ல வைத்து அவரது ஆடைகளை ஒவ்வொன்றாக களையச் செய்தனர்.

பின்னர் 9 பேரும் அந்த பெண்னை கொடூரமாகக் கற்பழித்தனர். பின்னர் கற்பழிப்பு காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்தனர். அந்த வெறி பிடித்த கும்பலிடம் தப்ப அந்த பெண் தற்கொலைக்கு முயன்றபோது அதைப் பார்த்து ரசித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

இது குறித்து காவல் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் ஸ்ரீசைலத்தில் பதுங்கி இருந்த முகமது, சையத் அன்வர், அலி, தயானி, சாலம் ஹமனி, காதர், காஜா அகமது, பைசல் சயானி, சையத் ஆகிய 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்