இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி பர்தெண்டு குமார், விக்கியின் வீட்டின் அருகே பிணமாகக் மீட்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விக்கியும் அவரது தந்தையும், பர்தெண்டு குமாரை கடத்தி சென்று கொலை செய்ததாக உறவினர்கள் குற்றஞ் சாற்றினர்.
இதைத் தொடர்ந்து, பர்தெண்டு குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விக்கியின் வீட்டை சில தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு விக்கி வீடு உள்ளிட்ட அவரது சமூகத்தை சேர்ந்த 9 பேரின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதில் 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
அவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில், இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.