விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு யுனைட்டட் வங்கி உட்பட 17 வங்கிகள் சுமார் ரூ.7,500 கோடியை கடனாக வழங்கியிருந்தன. அதில் இதுவரை ரூ.1,000 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து யுனைட்ட வங்கியின் தலைவர் கூறுகையில், ”கடன் வழங்கிய மொத்த தொகையை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்த சொத்துகளிலிருந்து வெறும் வட்டி வீதத்திற்கு சமமான தொகையை மட்டுமே எங்களால் மீட்டெடுக்க முடியும்.