இந்நிலையில், கடந்த மாதம் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி ஆசிரியர் பி. ஸ்ரீனிவாச ரெட்டி, சிறுமி தேசரி சனிகாவைத் திட்டியுள்ளார். அவரின் கேள்விகளுக்கு சனிகா சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி, பயமுறுத்தும் முயற்சியாக ஆசிரியர், பேனாவால் சனிகாவின் கண்களைக் குத்தியுள்ளார்.
இதனால் சனிகாவின் இடது கண் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குண்டூர் மாவட்டத்திலுள்ள சங்கர நேத்ராலயா உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்ற தேசரி குடும்பம், தற்போது சிறுமியின் கண்களும், எதிர்காலமும் இருண்டு விடுமோ என்ற அச்சத்துடன் இருக்கிறது.