அதேபோன்று ஓரினச் சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவும் வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். ஓரின திருமணத்திற்கு அமெரிக்காவில் நாடு தழுவிய அனுமதி அளித்து அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய சதானந்த கவுடா அதற்கு இந்தியாவில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் விரிவான ஆலோசனைகளுக்கு பிறகே இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
திருநங்கைகள் நலன் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறும் போது 377வது பிரிவு தானாகவே செல்லாததாகிவிடும் என்றார். எனினும் திருச்சி சிவா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்த பிரிவு குறித்து ஏதும் கூறப்படவில்லை என்பதால் மத்திய அரசின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.