பாகிஸ்தான் நாட்டின் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர், கடல் வழியாக குஜராத் மாநிலத்தில் ஊடுருவியதாக உளவுத்துறை தெரிவித்திருந்தது.
அந்தக் குழுவினர் குஜராத்தின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டனர். இந்நிலையில், 10 தீவிரவாதிகளில் 3 பேர், சுட்டுக்கொல்லப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.