தேர்தல் பிரசாரத்தில் மேடை சரிந்து விழுந்து விபத்து: காயமின்றி லாலு தப்பினார்

புதன், 14 அக்டோபர் 2015 (11:45 IST)
பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்துமுடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான வாக்கு சேகரிப்பில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.

அர்வால் நகரில் ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக அப்பகுதியில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் கட்சி பிரமுகர்கள் அதிக அளவில் அமர்ந்ததால் திடீரென மேடை சரிந்தது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிஷ்டவசமாக லாலு காயமின்றி தப்பினார். கட்சி பிரமுகர்கள் சிலர் லேசான காயம் அடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்