அர்வால் நகரில் ராஷ்டிரீய ஜனதாதள வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக அப்பகுதியில் மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் கட்சி பிரமுகர்கள் அதிக அளவில் அமர்ந்ததால் திடீரென மேடை சரிந்தது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிஷ்டவசமாக லாலு காயமின்றி தப்பினார். கட்சி பிரமுகர்கள் சிலர் லேசான காயம் அடைந்தனர்.