லாலு பிரசாத் யாதவின் மருமகன் கார் துப்பாக்கி முனையில் கடத்தல்

வியாழன், 4 பிப்ரவரி 2016 (19:25 IST)
பீகார் முன்னால் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் மருமகன் காரை, சிலர் துப்பாக்கி முனையில் கடத்தி சென்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
லாலு பிரசாத்தின் மருமகன் வினீத்யாதவ். இவருக்கு டொயோட்டோ பார்ச்சுனர் கார் உள்ளது. அந்த காருடன் அவரது டிரைவர் ஹரிபிரகாஸ், சிக்கந்தர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று மாலை 4 மணியளவில் நிறுத்தியிருந்தார்.
 
அப்போது தீடீரென அங்கு வந்த சிலர் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டி அந்த காரை எடுத்துச் சென்றுவிட்டனர். அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் இதுபற்றி தகவல் கொடுத்தார். தனிப்படை அமைக்கப்பட்டு காரை திருடிச் சென்றவர்களை தேடி வருகிறது டெல்லி போலீஸ்.
 
லாலுபிரசாத்தின் மருமகன் காரை சிலர் துப்பாக்கி முனையில் எடுத்துச் சென்ற விவகாரம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்