கொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பாலம் நேற்று இடிந்து விழுந்ததில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்த மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதலில், அந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அந்த எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மேலும், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.