கிசான் டிவி - விவசாயிகளுக்கு தனித் தொலைக்காட்சி

வியாழன், 10 ஜூலை 2014 (20:58 IST)
விவசாயிகள் நலனுக்காகத் தனி வேளாண் தொலைக்காட்சி கிசான் டிவி அறிமுகப்படுத்தப்படும். இந்த நிதியாண்டில் இந்தத் தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது நிதி நிலை அறிக்கையில் தெரிவித்தார்.
 
இத் தொலைக்காட்சியில் வேளாண் மற்றும் வேளான்சார் துறைகள் பற்றிய நிகழ்ச்சிகள் இடம்பெறும். புதிய வேளாண் தொழில்நுட்பம், நீர் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை போன்றவற்றின் தகவல்களை அவ்வப்போதே விவசாயிகள் தெரிந்துகொள்ள இந்தத் தொலைக்காட்சி வழிவகுக்கும்.
 
இதற்காக 2014-15 மத்திய பட்ஜெட்டில் ரூ100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்