அத்வானி என்னை ஆசிர்வதித்து தேர்தலுக்காக கடுமையாக உழைக்கும்படி கூறினார் என்று கிரண் பேடி தெரிவித்தார். மேலும் பாஜகவின் மற்றொரு தலைவரையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
கிரண் பேடி சந்திப்பு குறித்து அத்வானி கூறுகையில், கிரண் பேடி மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவார். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. கிரண் பேடி ஒரு புதிய திசையில் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று அத்வானி தெரிவித்தார்.