இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் சக்தன், "எனக்கு உடல் நலபாதிப்பு உள்ளது. இதனால், என்னை குனியக் கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதை அறிந்து கொண்ட எனது உதவியாளர் மனிதாபிமான முறையில் எனக்கு உதவி செய்துள்ளார். நானாக, எனது செருப்பைக் கழற்றுமாறு உதவியாளருக்கு உத்தரவிடவில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவில், அம்மாநில அமைச்சர் பங்கஜா முண்டே ஒரு விழாவில் கலந்து கொண்ட போது, அவரது செறுப்பை பாதுகாவலர் கழற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.