இதனால் அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சரிதா நாயர் மீது இது தொடர்பான வழக்குகள் திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோவை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் உள்ளன.
இதில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் சரிதா நாயருக்கும் அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டு சிறைத் தண்டனை தற்போது விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரிதா நாயர் மீதான சோலார் பேனல் மோசடி வழக்கில் தற்போது வந்திருப்பது முதலாவது தீர்ப்பாகும். இன்னும் சில நீதிமன்றங்களில் இவர் மீது இதே வழக்குகள் நிலுவையில் உள்ளன.