இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முன்னேற்றத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கு இன்றியமையாதது. அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானியாக எங்கள் மாநிலத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
மேலும், அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க கேரளாவில் இருந்து ஒரு குழு செல்கிறது. இந்த குழுவில் நான், கவர்னர் பி.சதாசிவம், எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், மந்திரி பி.ஜே.ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்றார்.