கேரள மாநிலத்திரலுள்ள திரிச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் வான்வெளியில் மிகப்பெரிய எரிகோளம் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் பீதியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றதாகவும், அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில் ராட்சத எரிகல் விழுந்ததைப் போல மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, சுற்றுப்புற தரைப்பகுதி கருகிப்போய் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.