கோவிலில் இருந்த அனைவரும் செய்வதறியாமல் ஓட்டம் பிடித்தனர். இதில் மகேஷை திடீரென காணவில்லை. உடனே அவரது நண்பர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மகேஷ் ஒரு வயலில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே மகேஷை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் மகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை மற்றும் வன்முறை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.