இதற்கு, கேரள மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கேரளத்தில் மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் குறித்து மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம். மேலும், 12 கடல் மைல்களுக்கு மேல் மீன்பிடிக்க தடை செய்யும் விவகாரம் குறித்தும் பிரதமர் மோடியுடன் பேசினோம். அத்துடன், கேரளத்துக்கு தேசிய மீன்வள மேம்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் மானியம் 75 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது குறித்தும் விவாதிதோம் என்றார்.