நடிகை காவ்யா மாதவனுக்கு போலி சாமியாருடன் தொடர்பு: சொல்வது யார் தெரியுமா?

செவ்வாய், 29 நவம்பர் 2016 (12:25 IST)
நடிகை காவ்யா மாதவன் கடந்த திங்கள் கிழமை பிரபல மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இந்நிலையில் காவ்யா மாதவனுக்கு போலி சாமியார் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக அவரது முன்னாள் மாமியார் கூறியுள்ளார்.


 
 
நடிகை காவ்யாவின் முதல் கணவர் நிஷால் சந்திராவின் தாய் தொலைப்பேசி மூலம் பேட்டியளித்துள்ளார். அதில், திருமணத்திற்கு முன்பே ஏற்கனவே திருமணமான நடிகர் திலீப்புடன் காவ்யாவுக்கு தொடர்பு இருந்தது. இந்தா சூழலில் தான் காவ்யாவுக்கு நிஷாலுடன் திருமணம் ஆனது.
 
திருமணமான பின்னர் காவ்யா எப்பொழுதும் திலீப்புடன் போனில் பேசிக் கொண்டே இருப்பார். அவருக்கு நிஷாலுடன் வாழ விருப்பம் இல்லை. திருமணமான தொடக்கத்திலேயே தனக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை என காவ்யா மாதவன் கூறினார்.
 
மேலும் காவ்யா மாதவன் போலி சாமியார் சந்தோஷ் மாதவன் உள்பட பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார். அவர் நல்ல பெண் அல்ல என அவரது முன்னாள் மாமியார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்