காஷ்மீரில் வாகன விபத்து: 8 பேர் பலி

வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (15:13 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தால் 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராம்பன் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் ஒரு டாடா சுமோ வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர்.

அந்த வாகனம் ஷெர்பிபி பகுதியில் உள்ள நச்சலனா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த வாகனம் சாலையை விட்டு வெளியே சென்று ஒரு கால்வாயில் விழுந்து கவிழ்ந்தது.

இச்சம்பவத்தால் வேனில் பயணம் செய்த 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்