முஃப்தி முஹமது சயீது இன்று காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைப்பு நல்கிய பாகிஸ்தான், ஹுரியத் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நாம் கண்டிப்பாக நன்றி தெரிவிக்க வேண்டும்.
ஏனென்றால், அவர்கள் தேர்தலுக்கு ஒரு அமைதியான சூழல் ஏற்பட உதவினார்கள். காஷ்மீரில் ஜனநாயக நடைமுறை சீராக நடைபெற அனுமதித்தார்கள். எனவே, பாகிஸ்தான், ஹுரியத் மற்றும் தீவிரவாதிகளின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றியை தெரிவிக்க வேண்டும்.