விழா மேடையில் ஆபாச படம் பார்த்து ரசித்த மந்திரி

வெள்ளி, 11 நவம்பர் 2016 (15:49 IST)
கர்நாடகா மாநிலத்தில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் தன்வீர் சேட் செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
கர்நாடகா மாநிலம் ரெய்ச்சூரில் இன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் தன்வீர் சேட் கலந்து கொண்டார். மேடையில் அமர்ந்த அமைச்சர் தனது செல்போனில் ஆபாச பாடம் பார்த்துள்ளார்.
 
இதை அவருக்கு தெரியாமல் நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த டிவி சேனல் ஒளிப்பதிவாளர் படம் பிடித்து, அது தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அமைச்சரின் இந்த செயலுக்கு மாநில பாஜக தலைவர் எடியூரப்பா மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு அமைச்சர் தன்வீர் சேட் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தனர்.
 
இதற்கிடையே அமைச்சர் தன்வீர் சேட் இதுகுறித்து விளக்கமளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
 
நான் மேடையில் இருந்த விழா தொடர்புடைய புகைப்படங்களை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது என் வாட்ஸ் அப்பில் எதேச்சையாக ஆபாச படங்கள் வந்தன. நான் ஆபாச படங்களை தேடி பார்க்கவில்லை, என்றார்.
 
ஏற்கனவே கர்நாடக மந்திரிகள் மூன்று பேர் ஆபாச படம் பார்த்து, பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்