பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கர்நாடக ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதி காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி ஜோஷி ஆகிய இரண்டு நீதிபதிகள் இதை குறித்து விசாரணை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சம்பவத்தை விசாரணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த சம்பவத்திற்கு விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். தவறுகள் யார் மீது இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.