இதனையடுத்து, ’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீற முடியாது. எனவே தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும். அதேநேரம், கர்நாடக விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் தண்ணீர் திறக்கப்படும்’ கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்தார்.
இதனிடையே, கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்தும், முதல்வர் சித்தராமய்யா ராஜிநாமா கோரியும், புதன்கிழமை முதல் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கம் மற்றும் கன்னட அமைப்புக்கள் அறிவித்தன.
இதன் ஒரு பகுதியாக மாண்டியாவில் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் லாரியின் கண்ணாடிகள் நொறுங்கன. மேலும் லாரியின் டயர்களில் உள்ள காற்றை பிடிக்கிவிட்டு, அந்த டயர்களை கழற்றி தீ வைத்து எரித்தனர்.