”இரவில் விளையாடியதால் பகலில் கோட்டைவிட்ட கோலி”: பாலிவுட் நடிகரின் பகிரங்க கருத்தால் சர்ச்சை!

வெள்ளி, 27 மார்ச் 2015 (17:18 IST)
இந்திய அணியின் தோல்விக்கு அனுஷ்கா சர்மாதான் காரணமென்றும் அவரது வீடு மீது கல் எறிய வேண்டுமென பாலிவுட் நடிகர் கமல் ரசித் கான் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
 
இந்தியா தோல்விக்கு காரணம் அனுஷ்கா சிட்னி சென்றது தான் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் கமல் கான்  உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா தோற்றதற்கு காரணம் அனுஷ்கா தான். எனவே அவர் வீட்டு மீது கல்லெறியுங்கள் என்று கமல் ரசித் கான் ரசிகர்களை துண்டி விடும் விதத்தில் டுவிட்டரில் எழுதியுள்ளார். மேலும் அனுஷ்கா சர்மாவின் படங்களையும் புறக்கணிக்க வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.
சிட்னி கிரவுண்டில் நன்றாக விளையாடுவார் விராட் கோலி என மக்கள் நம்பினர். ஆனால் இரவில் விளையாடிய அவரால் பகலில் எப்படி விளையாட முடியும்?- என்று பகிரங்கமாக  கமெண்ட் அடித்துள்ளார்.
முன்னணி நட்சத்திரங்கள் அல்லது பிரபலங்களை கிண்டலடித்து பப்ளிசிட்டி தேடும் நபரான இந்த கமல் கான், இதற்கு முன்னும் இதுபோன்ற பல சர்ச்சை கருத்துக்களைக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்