அப்போது அவர், "உல்லாசப் பயணம் மற்றும் தேன்நிலவுக்கு போவதுபோல் தலித் வீடுகளுக்கு ராகுல் காந்தி சென்று வருகிறார். ஒரு தலித் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டிருந்தால் அந்த வாய்ப்பில் அவர் பிரதமராகி இருக்க முடியும்" என்று ராகுல் காந்தியை அவர் நேரடியாகவே விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த விஜய் ராவ் என்பவர், இந்த தேன்நிலவு பேச்சு தொடர்பாக பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.