உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஜெகன்மோகன் ரெட்டி மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (20:18 IST)
தொடர் உண்னாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் உடல் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் இன்று வலுக்கட்டாயமாக போலிசாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 
 
ஒய்.எஸ்.ஆர்., கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டும் முன்னேற்றம் காணவில்லை. மாநில வளர்ச்சி கருத்தில் கொண்டு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி  அக்.7 ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
 
இன்று அதிகாலை, இவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அதனால் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்