முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மனுவை விசாரிக்க, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதற்கு தடை விதிக்கக் கோரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் மனு மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.பானுமதி ஆகியோர் முரண்பட்ட தீர்ப்பு அளித்தனர்.
இதனையடுத்து அன்பழகனின் மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அமைக்கப்பட்டது. இந்த அமர்வில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த மனு வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.