ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனம் செல்லாது எனவும், ஒரு வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் எனவும் நீதிபதி மதன் பி.லோகூர் கூறினார். மேலும் புதிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நீதிபதிகள் மதன் பி. லோகு, பானுமதி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், இரு நீதிபதிகளின் மாறுப்பட்ட கருத்தால் வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை 3 பேர் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.