போலியோ தடுப்பு மருந்து போடும் தேதி மாற்றம்!

வியாழன், 14 ஜனவரி 2021 (15:15 IST)
போலியோ சொட்டு மருந்து ஜனவரி 31 ஆம் தேதி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 16 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் அதற்கு எதிரான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இப்போது போலியோ சொட்டு மருந்து போடும் தேதி ஜனவரி 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்