காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத அளவிற்கு கன மழை பெய்ததால், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவற்றில் சிக்கி பல மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்றும், மழை பாதித்த பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.
இதைத்தொடர்ந்து, தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.