தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ராகுல் காந்தி விருப்பம்

செவ்வாய், 19 ஜனவரி 2016 (09:32 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரும்பம் தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்தின் பாரம்பரியம் மதிக்கப்படவேண்டும் என்றும் காளைகளை துன்புறுத்தாமல், ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டும் என்றும் ராகுல் காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்