இந்திய அரசை குற்றம் சாட்டிய பெண்ணிற்கு பன்றி காய்ச்சல்!

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (09:24 IST)
ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துக்கொண்டவர் ஜெய்ஷா.


 


போட்டியில் பங்கு பெற்ற பின், அவருக்கு தண்ணீர் கூட தரவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், பிரேசில் நாட்டில் இருந்து, இந்தியா வந்த அவருக்கு, காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டது.

அவரின் ரத்த மாதிரையை சோசனை செய்ததில், அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் பெங்களுரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.இவருடன் இணைந்து பயிற்சில் ஈடுபட்ட, சுதா சிங்கிற்கும் பன்றி காய்ச்சல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்