இது குறித்து பிரகாசம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், சிறுவன் பிடிபட்ட சம்பவத்தன்று காவல்நிலையத்தில் ஒரே ஒரு காவலர் மட்டுமே இருந்துள்ளார். அவர் சாப்பிடுவதற்கு வெளியே செல்லும் போது சிறுவன் தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காகவே சங்கிலியால் கட்டி போட்டதாகவும், மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.