அதன்படி, பொது சுகாதார பொறியியல் துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இன்று முதல்வர் உமர் அப்துல்லாவின் வீட்டை முற்றுகையிடுவதற்காக பேரணியாக சென்றனர். அவர்கள் சோன்வார் பகுதியை அடைந்து ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
ஆனால், போராட்டத்தைக் கைவிட மறுத்த ஊழியர்கள், உயர்பாதுகாப்பு கொண்ட முதல்வரின் வீட்டை நோக்கி முன்னேறினர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.