மத்திய அரசு மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது - ப.சிதம்பரம்

புதன், 6 மே 2020 (19:50 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மக்களிடம் இருந்து மத்திய அரசு பணத்தை எடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரொனாவால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 13 ரூபாயும் உற்பத்தி விலையில் மத்திய அரசு நேற்று உயர்த்தியது.

இதுகுறித்து காங்கிரஸ்  மூத்ததலைவர் ப. சிதம்பரம் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

’’கொரோனா காரணமாக பொருளாதாரம் சரிந்துள்ளதால், மத்திய அரசு நிதி பற்றாக்குறையை சரிசெய்ய கடன் வாங்க வேண்டும். இந்த சூழலில் அதிக வரி விதிக்கக் கூடாது.பொருளாதாரம் உச்சத்தில் இருந்தால்தால் வரி விதிக்கலாம்.   ஆனால் ஊரடங்கின்போது `வரி விதிப்பது  மக்களை ஏழ்மையில் தள்ளிவிடும். எனவே நாட்டு மக்களுக்கு பணத்தை நேரடியாக வழங்க வேண்டுமென தொடர்ந்து கூறி வருகிறோம்.  ஆனால் மத்திய அரசு வழங்குவதற்குப் பதிலாக மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது ’’என தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்