பீகார் மாநிலத்தில், பாஜகவுக்கு எதிராக முதல்வர் நிதிஷ்குமாரும், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் ஒன்று சேர்ந்து போட்டியிட்டனர். மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், அங்கு மக்களை பாஜஜவுக்கு எதிராக துாண்டி விட்டனர். அதனால்தான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது.
ஆனால், ஓட்டு சதவீதத்தை பார்க்கும் போது, பாஜக பெற்றது குறைவான வாக்குகள் அல்ல. நிதிஷ்குமார் -லாலு கூட்டணி பெற்ற ஓட்டுக்களை விட பாஜக அதிக வாக்குகளையே வாங்கியுள்ளது. எனவே, இதெல்லாம் ஒரு தோல்வியே இல்லை என்றார்.