இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 2 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில் 3 ஆவது செயற்கைக் கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-சியை, பி.எஸ்.எல்.வி. சி-26 என்ற ஏவுகணை மூலம் விண்வெளிக்குச் செலுத்த உள்ளது.
கடந்த 2013, நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிக்காக பி.எஸ்.எல்.வி. சி-25 ஏவுகணை மூலம் மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்டது. அது கடந்த மாதம் 24 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.